Breaking Newsசெல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விடுவிக்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றவாசிகள்

-

கடந்த வாரம் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில சட்டவிரோத குடியேற்றவாசிகள் செல்லுபடியாகும் வீசா எதுவுமின்றி விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஊடக அமைப்பு ஒன்றின் விசாரணை அறிக்கையின்படி, அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட கடிதங்களில் அவர்கள் தற்காலிக அனுமதியின் பேரில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் செல்லுபடியாகும் விசா அனுமதி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட 83 பேரில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

அவர்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எந்தவொரு விசா அல்லது விசா நிபந்தனைகளும் இன்றி கடிதம் மாத்திரம் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினையாக உள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...