Newsதோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

தோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

-

50 கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இது சுயாதீன மதிப்பாய்வு மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமர்பித்த அறிக்கைகளின்படி, திட்டப்பணிகள் முறையான திட்டமிடல் இன்றி அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் 400 உள்கட்டமைப்பு திட்டங்களின் சாத்தியக்கூறு ஆய்வுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் போதிய நிதியில்லாத திட்டங்களுக்கு முறையான மதிப்பீடு இன்றி வேண்டுமென்றே பணம் செலவிடப்பட்டதாக அமைச்சர் கேத்தரின் கிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலை மேலும் நாட்டை பொருளாதார அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் தற்போதைய அரசாங்கம் புதிய மீளாய்வு அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எனவும் கேத்தரின் கிங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து உட்கட்டமைப்பு திட்டங்களும் எவ்வித வெட்டுமின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்த போதிலும், மீளாய்வு தரவுகளில் குறைபாடுகள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனிடையே, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான செலவினங்களில் மத்திய அரசின் பங்களிப்பை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்க போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமீபத்தில் முடிவு செய்திருந்தார்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...