Newsதோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

தோல்வியடைந்த 50 கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்திவைப்பு

-

50 கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இது சுயாதீன மதிப்பாய்வு மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமர்பித்த அறிக்கைகளின்படி, திட்டப்பணிகள் முறையான திட்டமிடல் இன்றி அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேலும் 400 உள்கட்டமைப்பு திட்டங்களின் சாத்தியக்கூறு ஆய்வுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் போதிய நிதியில்லாத திட்டங்களுக்கு முறையான மதிப்பீடு இன்றி வேண்டுமென்றே பணம் செலவிடப்பட்டதாக அமைச்சர் கேத்தரின் கிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலை மேலும் நாட்டை பொருளாதார அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் தற்போதைய அரசாங்கம் புதிய மீளாய்வு அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எனவும் கேத்தரின் கிங் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து உட்கட்டமைப்பு திட்டங்களும் எவ்வித வெட்டுமின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்த போதிலும், மீளாய்வு தரவுகளில் குறைபாடுகள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனிடையே, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான செலவினங்களில் மத்திய அரசின் பங்களிப்பை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்க போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் கேத்தரின் கிங் சமீபத்தில் முடிவு செய்திருந்தார்.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...