Newsஉலகின் சோகமான யானை உயிரிழப்பு

உலகின் சோகமான யானை உயிரிழப்பு

-

விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “விஷ்வ மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது.

மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் முகப்புத்தகத்தில் காணொளியில் அறிவித்துள்ளார். அதில் அவர் “மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் ”என தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை(24) மாலி தனது தும்பிக்கையை சுவரில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்(28) யானையின் நிலைமை மிகவும் மோசமடைந்ததுடன், அதிகமாக சுவாசிக்க சிரமப்பட்டுள்ளது. பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையில் யானைக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமனியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாலி, மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியான இமெல்டா மார்கோஸுக்கு 1981ஆம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மணிலா மிருகக்காட்சிசாலையில் 1977ஆம் ஆண்டில் வந்த மற்றொரு யானையான ஷிவா, 1990ஆம் ஆண்டில் உயிரிழந்ததிலிருந்து மிருகக்காட்சிசாலையில் மாலி யானை மட்டுமே இருந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், மணிலா உயிரியல் பூங்கா குழந்தைகளுக்கான தடுப்பூசி மையமாக செயல்பட்டது. அங்கு மாலி அவர்களை மகிழ்விக்க தனது நேரத்தை செலவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...