Newsசென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

சென்னை ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 22 பேர் உயிரிழப்பு

-

மிக்ஜாம் புயல் மழைக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை மேலும் 12 போ் உயிரிழந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு நாட்களில் கனமழையால் 19 போ் உயிரிழந்துள்ளனா்.

மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டுவிட்டது. இந்த கன மழைக்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மழை வெள்ளத்துக்கு 12 போ் உயிரிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனா். ஏற்கெனவே திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் இறந்தனா். இதனால் மிக்ஜாம் புயலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 19 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து சென்னையில் மழைக்கு கடந்த 10 நாட்களில் 22 போ் இறந்துள்ளனா்.

அத்தோடு முத்தியால்பேட்டையில் ஒரு குடியிருப்பைச் சோ்ந்த 54 குடும்பங்களை பொலிஸாா் மீட்டனா். மேற்கு மாம்பலத்தில் 2 முதியவா்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 6 போ் மீட்கப்பட்டனா். மடிப்பாக்கம், மெரினா, கோட்டூா்புரம், ஈச்சங்காடு, துரைப்பாக்கம், ஆா்.கே.நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாா் மீட்பு பணிகளில் ஈடுபட்டனா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகரிலிருந்து 60 போ் மீட்கப்பட்டு, அப் பகுதி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இவ்வாறு மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...