ஜப்பானின் பிரபல சுற்றுலா தலமான ஹகோடேட் தீவில் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனையறிந்த மக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளன.
அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அம்மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். அதன் முடிவு வெளிவந்த பின்னர் மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வரும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.