Newsதமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

தமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

-

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பணயக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பணயக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள்.

அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பணயக்கைதிகளை கொலை செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம் என்றார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...