Newsலண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

-

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி அதிகாலை 4.20 மணிக்கு லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சிங் அறைக்குத் திரும்பாததால், காலை 5.48 மணிக்கு, அது குறித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நதி ஒன்றிலிருந்து சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட, இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், நேற்று, அதாவது, 21.12.2023 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரர் ஒருவரும் நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூற, குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் வாழும் சிங்கின் உறவினரான Irendeep Brown என்னும் பெண்மணி, சிங் மரணம் தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நதியோரமாக நடந்து சென்ற சிங், தண்ணீரில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ள Irendeep, அது ஒரு விபத்து என்றும், சிங்குக்கு நீச்சல் தெரியாது, உறையவைக்கும் குளிர்ந்த நீரில் விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம், அது விபத்தேயொழிய, தற்கொலையோ, இனவெறித்தாக்குதலோ அல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,சிங்குடைய ATM அட்டையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...

அதிகரித்து வரும் பணவீக்கம் வட்டி விகிதக் குறைப்புகளைப் பாதிக்குமா?

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் (ABS) மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது, நுகர்வோர் விலைகள் ஆண்டுதோறும் 2.8 சதவீதம் உயர்ந்தன. ஜூன் மாதத்தில் நுகர்வோர்...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு – இரு குழந்தைகள் பலி – 17 பேர் காயம்

அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியின் தேவாலய வழிபாட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கோடை...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...