Newsஅதிரடியாக தரையிறக்கப்பட்ட 300 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

அதிரடியாக தரையிறக்கப்பட்ட 300 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

-

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பிரான்சில் உள்ள விமான நிலையம் ஒன்றில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்புடைய விமானமானது வடகிழக்கு பிரான்சில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அந்த விமானத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலர் பயணப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

ஏர்பஸ் ஏ340 ரக விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிகரகுவா தலைநகர் மனகுவாவுக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே தொழில்நுட்ப காரணங்களை குறிப்பிட்டு பிரான்சின் மார்னே பகுதிக்கு சொந்தமான குட்டி விமான நிலையம் ஒன்றில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிசார் அந்த விமான நிலையத்தை மூடிவிட்டு, பயணிகளை விசாரிக்கும் பொருட்டு தடுத்து வைத்துள்ளனர். 303 இந்திய பயணிகளில் சிலர் சட்டவிரோத குடியேறிகள் என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரு பயணிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முதலில் பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருக்கவே அதிகாரிகள் அனுமதித்தனர், ஆனால் பின்னர் விமான நிலையத்தின் வருகை ஓய்வறை படுக்கைகளுடன் காத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த விமானமானது ரோமானிய தனியார் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் விமானம் புறப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை ஆராய்ந்து வருகிறோம் என்றும், பயணிகளின் நலனை உறுதிப்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...