Newsமுதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

-

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் திகதி முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்யாவில் ஜனவரி மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷ்ய கண்டத்தில் உள்ள உக்ரைனும் ரஷ்யாவின் பாரம்பரிய விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தது.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் எதிரொலியாக உக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு ஜனாதிபதி வெலாடிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய பாரம்பரிய முறையைத் தவிர்த்து மேற்கத்திய அல்லது கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடினர்.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி டிசம்பர் 24ம் திகதி அறிவித்திருந்தார். அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ”அனைத்து உக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் AI – நிபுணர்கள் எச்சரிக்கை

எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் பணியாளர்கள் மற்றும் வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று துணை வேலைவாய்ப்பு அமைச்சர் Tim Wilson கூறியுள்ளார். பழைய யோசனைகளுக்குக் கட்டுப்பட்டு...

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

மெல்பேர்ணில் அடுத்த வாரம் மாறவுள்ள வானிலை

அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண் உட்பட ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு...

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் முற்றிலும் AI...