Newsஅவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

-

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தற்காலிக உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இரு அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாஹ் செயற்பாட்டாளர் என தெரியவந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதன்படி அவுஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கான திட்டங்களை தயார் செய்ய முடியும் எனவும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலும் தாக்குதல்கள் நிகழலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக பதில் உள்ளக அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...