News8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் - எலான் மஸ்க்

8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் – எலான் மஸ்க்

-

எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை தயாரித்துள்ளது. 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ரொக்கெட்டுக்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ரொக்கெட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.

பின்னர் தவறுகள் சரிசெய்யப்பட்டு நவம்பர் மாதம் மீண்டும் சோதனை செய்யப்பட்ட போது விண்கலம் தனியாக பிரிந்தபிறகு, பூஸ்டர் வெடித்து சிதறியது.

இதையடுத்து தவறுகள் சரி செய்யப்பட்டு, மூன்றாவது சோதனையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய எலான் மஸ்க், மூன்றாவது ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிகரமாக அமையும் என்றார்.

மேலும், தனது நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்றும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கு நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...