Newsஉருகும் பனிப்பாறை - அதில் உருவாகும் உருவங்கள்

உருகும் பனிப்பாறை – அதில் உருவாகும் உருவங்கள்

-

அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பூமியின் தென் துருவத்தில் உள்ள அந்தாட்டிக்கா (Antarctica), முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் கண்டமாகும். இங்கு மனிதர்கள் வசிப்பதில் கடினமாக இருப்பினும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகினறனர்.

இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியதாக ஏ23ஏ (A23a) உள்ளது. 1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.

சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கியுள்ளது.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.

எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...