Newsஇலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

இலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

-

இலங்கையில் மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் நேற்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா தேசிய ரீதியில் மட்டுமல்ல உலக வாழ் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர்.

1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...