NoticesTamil Community Eventsபெய்ஜிங்கில் பொங்கல் விழா 2024

பெய்ஜிங்கில் பொங்கல் விழா 2024

-

பெய்ஜிங்கில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் நாள் இனிதே நிறைவுபெற்றது.

பெய்ஜிங் வாழ் தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.வண்ணமயமான பூஜை அலங்காரத்தின் நடுவே விநாயகப் பெருமான் அமர்ந்திருக்க, செழிப்பான கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரியக் கோலத்தின் மேல் பொங்கலை பொங்க வைத்து, பெண்கள் வட்டமாக வந்து கும்மியடித்து “பொங்கலோ பொங்கலைக்” கொண்டாடினர்.

குத்துவிளக்கு ஏற்றி, தமிழ் தாய் வாழ்த்துப் பாடி, இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய நிகழ்வானது அழகான முறையில் தொகுத்து வழங்கப்பட்டது.நிகழ்வானது, “பெய்ஜிங் சங்கத்தின்” குழுப் பாடல், பொங்கலைப் பற்றிய வினாடி வினா மற்றும் அதிர்ஷ்ட குலுக்கலுடன் இனிதே நிறைவடைந்தது.

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற கூற்றுக்கு இணங்க அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

செய்தியாளர்,

சி. தாமோதரன், இந்தியா.

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...