NoticesTamil Community Eventsபெய்ஜிங்கில் பொங்கல் விழா 2024

பெய்ஜிங்கில் பொங்கல் விழா 2024

-

பெய்ஜிங்கில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் நாள் இனிதே நிறைவுபெற்றது.

பெய்ஜிங் வாழ் தமிழ் நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.வண்ணமயமான பூஜை அலங்காரத்தின் நடுவே விநாயகப் பெருமான் அமர்ந்திருக்க, செழிப்பான கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரியக் கோலத்தின் மேல் பொங்கலை பொங்க வைத்து, பெண்கள் வட்டமாக வந்து கும்மியடித்து “பொங்கலோ பொங்கலைக்” கொண்டாடினர்.

குத்துவிளக்கு ஏற்றி, தமிழ் தாய் வாழ்த்துப் பாடி, இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய நிகழ்வானது அழகான முறையில் தொகுத்து வழங்கப்பட்டது.நிகழ்வானது, “பெய்ஜிங் சங்கத்தின்” குழுப் பாடல், பொங்கலைப் பற்றிய வினாடி வினா மற்றும் அதிர்ஷ்ட குலுக்கலுடன் இனிதே நிறைவடைந்தது.

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற கூற்றுக்கு இணங்க அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள்.

செய்தியாளர்,

சி. தாமோதரன், இந்தியா.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...