Cinemaசர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் 'எமர்ஜென்சி' திரைப்படம்

சர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படம்

-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியுமுள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் வெளியிட்டுத்திகதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் பேசுகையில், ‘சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை எடுத்து இருக்கிறேன். எமர்ஜென்சி இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். ஒரு வரலாற்று நிகழ்வை படமாக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

இந்நிலையில் இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். படம் ரிலீசாகும்போது எதிர்ப்பை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது. உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...