Sportsடென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் - அவுஸ்திரேலிய ஒபன்

டென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் – அவுஸ்திரேலிய ஒபன்

-

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியனானார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14‍ம் திக‌தி தொடங்கியது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் ஷின்னர் மெத்வதேவாகியோர் மோதினர். நேற்று முந்தினம் (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷின்னர் வெற்றி பெற்றார்.

ஷின்னர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது இத்தாலி நாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பட்டம் வென்ற இள வயது வீரருக்கான பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...