Newsமனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

மனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

-

காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை பேணுவது தற்போது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் நிதிகள் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஹமாஸ் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் திட்ட ஊழியர்கள் பலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுவரை உதவி வழங்கிய ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் தங்களது நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.

அந்த நிலையைக் கருத்திற் கொண்டு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...