Newsகுறுஞ்செய்திகளை நோட்டம் விடும் கூகுள்

குறுஞ்செய்திகளை நோட்டம் விடும் கூகுள்

-

கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான ‘கூகுள் மெசேஜஸ்’ (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும் செய்துவருகிறது.

இந்நிலையில், அப்புதிய செய்யறிவு அம்சம் கொண்ட குறுஞ்செய்தி செயலி பயனர்களின் உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யாருடன் என்ன பேசுகிறார்கள்? எப்படி பேசுகிறார்கள்? பயனர்கள் பேசுபவருடனான உறவு என்ன? பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன? எங்கு எப்படி பேசுவார்கள்? அதாவது அலுவலகத்தில் இருந்தால் எப்படி பேசுகிறார்கள், வீட்டிலிருந்தால் எப்படி பேசுகிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி கண்காணிக்கப்படும் எழுத்து வடிவிலான உரையாடல் விவரங்கள் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள செய்யறிவு, இந்த விவரங்களைக் கண்காணித்து, வரும் குறுஞ்செய்திகளுக்கு என்ன பதிலளிக்கலாம் எனப் பரிசீலிக்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூகுளின் இன்காங்கனீட்டோ (incognito mode) பக்கத்திலும், பயனாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்ததற்காக, கூகுளுக்கு 5 பில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இன்காங்கனிட்டோ பக்கத்தில் கண்காணிக்கப்படமாட்டோம் எனத் தவறான பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...