Cinemaஇசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்

-

மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகனான மோகன்லால், ஜில்லா, இருவர், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன், லூசிபர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மோகன்லால் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். அதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் புத்தாண்டு தினத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். ‘பாரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் லிஜொ புன்னோஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா’ஸ் டிரெசர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சி, கோவா பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூலம் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...