NoticesTamil Community Eventsதமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

-

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இம்முறை வெகுசிறப்பாக Nunawarding Community Hub & Tunstall Park இல் சுமார் 5000இற்கும் மேலான தமிழ் மற்றும் பல்லின கலாசார மக்களின் பங்குபற்றலுடன், இருபது(20) அமைப்புகளின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

2011ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு பல பரிமாண வளர்ச்சிபெற்று, பின்னர் எல்லா அமைப்பினரும் பங்குபற்றும் ஒரு பெரும் பொங்கல் நிகழ்வாக மாற்றவேண்டும் என்ற கேசி தமிழ் மன்றத்தின் பெரும் எண்ணத்தின்பால் 2019ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா, ”தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா” எனப் பெயர்மாற்றம் பெற்று கேசி தமிழ் மன்றம் பல சமுக அமைப்புக்களின் பங்களிபில் இன்று மிகப்பெரிய தமிழர் அடையாள நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணிக்கு மெல்போனின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து காலைவேளையில் வந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளுடன் ஊரெல்லாம் கூடி ஆரம்பமாகிய பொங்கல், கும்மியாட்டம் மற்றும் பறை இசையுடன் களைகட்டி பார்வையாளர்களுக்கு தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பியது.

பின்னர் உள்ளரங்க, வெளியரங்க நிகழ்வுகள் மற்றும் தமிழர் விளையாட்டான சடுகுடு , கிளித்தட்டு , அங்காடிகள், சிறுவர் விளையாட்டு ( Kids Rides) , மிருக பண்ணை என பார்க்கும் இடம் எல்லாம் விழக்கோலம்பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் மிக ஈடுபாட்டுடன் தமிழர் விளையாட்டில் ஆர்வமாக பங்குபற்றி விளையாட்டுத்திடலைச் சூழ்ந்திருந்த மக்களை மகிழ்வித்து ஆரவரத்துடன் கொண்டாடினார்கள். தமிழர் பாரம்பரியம் வருகின்ற தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது என்ற மன நிறைவு தோன்றியுள்ளது.

உள்ளரங்கில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட புகைப்பட , ஓவிய , புத்தக கண்காட்சியும்,குழந்தைகளுக்கான முகப் பூச்சு , மண்பானை செய்தல், பாணக்கு வர்னம் தீட்டுதல், கீழடி கண்காட்சி, தேனீர்க்கடை, மற்றும் பல நிகழ்வுகளும் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

இதுமட்டுமல்லாது கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு மலர் இளவேனிலின் 25ஆவது இதழ் வெளியிடப்பட்டது. கடந்த 3 இதழ்கள் அவுஸ்திரேலிய தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ்.

வெளியரங்க மேடையில் தமிழ், Bulgarian, கிழைத்தேய மேலைத்தேய இசை நிகழ்வு, தமிழர் பாரம்பரிய கிராமிய நடனம், பரத நாட்டியம், வீணை , தமிழர் இசை என சுமார் 5 மணி நேரம் இடைவிடாத நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றது. இப்பகுதி நாம் இதுவரை கானாத , சந்திக்காத ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை எற்படுத்தியது, பார்க்கும் இடம் எல்லாம் கலாசர உடையில் இளைஞர்கள் , யுவதிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கூட்டம் களைகட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...