NoticesTamil Community Eventsதமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

-

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இம்முறை வெகுசிறப்பாக Nunawarding Community Hub & Tunstall Park இல் சுமார் 5000இற்கும் மேலான தமிழ் மற்றும் பல்லின கலாசார மக்களின் பங்குபற்றலுடன், இருபது(20) அமைப்புகளின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

2011ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு பல பரிமாண வளர்ச்சிபெற்று, பின்னர் எல்லா அமைப்பினரும் பங்குபற்றும் ஒரு பெரும் பொங்கல் நிகழ்வாக மாற்றவேண்டும் என்ற கேசி தமிழ் மன்றத்தின் பெரும் எண்ணத்தின்பால் 2019ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா, ”தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா” எனப் பெயர்மாற்றம் பெற்று கேசி தமிழ் மன்றம் பல சமுக அமைப்புக்களின் பங்களிபில் இன்று மிகப்பெரிய தமிழர் அடையாள நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணிக்கு மெல்போனின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து காலைவேளையில் வந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளுடன் ஊரெல்லாம் கூடி ஆரம்பமாகிய பொங்கல், கும்மியாட்டம் மற்றும் பறை இசையுடன் களைகட்டி பார்வையாளர்களுக்கு தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பியது.

பின்னர் உள்ளரங்க, வெளியரங்க நிகழ்வுகள் மற்றும் தமிழர் விளையாட்டான சடுகுடு , கிளித்தட்டு , அங்காடிகள், சிறுவர் விளையாட்டு ( Kids Rides) , மிருக பண்ணை என பார்க்கும் இடம் எல்லாம் விழக்கோலம்பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் மிக ஈடுபாட்டுடன் தமிழர் விளையாட்டில் ஆர்வமாக பங்குபற்றி விளையாட்டுத்திடலைச் சூழ்ந்திருந்த மக்களை மகிழ்வித்து ஆரவரத்துடன் கொண்டாடினார்கள். தமிழர் பாரம்பரியம் வருகின்ற தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது என்ற மன நிறைவு தோன்றியுள்ளது.

உள்ளரங்கில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட புகைப்பட , ஓவிய , புத்தக கண்காட்சியும்,குழந்தைகளுக்கான முகப் பூச்சு , மண்பானை செய்தல், பாணக்கு வர்னம் தீட்டுதல், கீழடி கண்காட்சி, தேனீர்க்கடை, மற்றும் பல நிகழ்வுகளும் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

இதுமட்டுமல்லாது கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு மலர் இளவேனிலின் 25ஆவது இதழ் வெளியிடப்பட்டது. கடந்த 3 இதழ்கள் அவுஸ்திரேலிய தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ்.

வெளியரங்க மேடையில் தமிழ், Bulgarian, கிழைத்தேய மேலைத்தேய இசை நிகழ்வு, தமிழர் பாரம்பரிய கிராமிய நடனம், பரத நாட்டியம், வீணை , தமிழர் இசை என சுமார் 5 மணி நேரம் இடைவிடாத நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றது. இப்பகுதி நாம் இதுவரை கானாத , சந்திக்காத ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை எற்படுத்தியது, பார்க்கும் இடம் எல்லாம் கலாசர உடையில் இளைஞர்கள் , யுவதிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கூட்டம் களைகட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...