NoticesTamil Community Eventsதமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

-

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இம்முறை வெகுசிறப்பாக Nunawarding Community Hub & Tunstall Park இல் சுமார் 5000இற்கும் மேலான தமிழ் மற்றும் பல்லின கலாசார மக்களின் பங்குபற்றலுடன், இருபது(20) அமைப்புகளின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

2011ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு பல பரிமாண வளர்ச்சிபெற்று, பின்னர் எல்லா அமைப்பினரும் பங்குபற்றும் ஒரு பெரும் பொங்கல் நிகழ்வாக மாற்றவேண்டும் என்ற கேசி தமிழ் மன்றத்தின் பெரும் எண்ணத்தின்பால் 2019ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா, ”தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா” எனப் பெயர்மாற்றம் பெற்று கேசி தமிழ் மன்றம் பல சமுக அமைப்புக்களின் பங்களிபில் இன்று மிகப்பெரிய தமிழர் அடையாள நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணிக்கு மெல்போனின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து காலைவேளையில் வந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளுடன் ஊரெல்லாம் கூடி ஆரம்பமாகிய பொங்கல், கும்மியாட்டம் மற்றும் பறை இசையுடன் களைகட்டி பார்வையாளர்களுக்கு தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பியது.

பின்னர் உள்ளரங்க, வெளியரங்க நிகழ்வுகள் மற்றும் தமிழர் விளையாட்டான சடுகுடு , கிளித்தட்டு , அங்காடிகள், சிறுவர் விளையாட்டு ( Kids Rides) , மிருக பண்ணை என பார்க்கும் இடம் எல்லாம் விழக்கோலம்பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் மிக ஈடுபாட்டுடன் தமிழர் விளையாட்டில் ஆர்வமாக பங்குபற்றி விளையாட்டுத்திடலைச் சூழ்ந்திருந்த மக்களை மகிழ்வித்து ஆரவரத்துடன் கொண்டாடினார்கள். தமிழர் பாரம்பரியம் வருகின்ற தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது என்ற மன நிறைவு தோன்றியுள்ளது.

உள்ளரங்கில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட புகைப்பட , ஓவிய , புத்தக கண்காட்சியும்,குழந்தைகளுக்கான முகப் பூச்சு , மண்பானை செய்தல், பாணக்கு வர்னம் தீட்டுதல், கீழடி கண்காட்சி, தேனீர்க்கடை, மற்றும் பல நிகழ்வுகளும் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

இதுமட்டுமல்லாது கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு மலர் இளவேனிலின் 25ஆவது இதழ் வெளியிடப்பட்டது. கடந்த 3 இதழ்கள் அவுஸ்திரேலிய தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ்.

வெளியரங்க மேடையில் தமிழ், Bulgarian, கிழைத்தேய மேலைத்தேய இசை நிகழ்வு, தமிழர் பாரம்பரிய கிராமிய நடனம், பரத நாட்டியம், வீணை , தமிழர் இசை என சுமார் 5 மணி நேரம் இடைவிடாத நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றது. இப்பகுதி நாம் இதுவரை கானாத , சந்திக்காத ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை எற்படுத்தியது, பார்க்கும் இடம் எல்லாம் கலாசர உடையில் இளைஞர்கள் , யுவதிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கூட்டம் களைகட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...