News95 வயதில் பட்டம் பெற்ற மிகவயதான பட்டதாரி

95 வயதில் பட்டம் பெற்ற மிகவயதான பட்டதாரி

-

இங்கிலாந்து ‘சர்ரே’ நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற மனநல மருத்துவரான டேவிட் மார்ஜோட், 72 ஆண்டுகளுக்குப்பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து ‘நவீன ஐரோப்பிய தத்துவத்தில்’ எம்.ஏ முதுகலைப்பட்டத்தை தற்போது பெற்றுள்ளார்.

95 வயதில் மிகவயதான பட்டதாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் பரிசீலனை செய்து வருகிறார்.

இதுகுறித்து மார்ஜோட் கூறும் போது, “பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் மனநல மருத்துவத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், தத்துவம் மற்றும் நவீன தொழிலில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்காக மீண்டும் கல்விக்குச் செல்ல முடிவு செய்தேன்.”

“நான் வாழும் காலநேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன். உள்ளூர் பேப்பர் ஒன்றில் கிங்ஸ்டன் பல்கலைக்கழக படிப்புக்கான விளம்பரத்தைப் பார்த்தேன். அதை தொடர்ந்து விண்ணப்பம் செய்தேன்.”

“பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் எனக்கு படிக்க மிகவும் உதவியாக இருந்தனர். இது ஒரு அற்புதமான பாடமாக இருந்தது. மற்றும் கற்பித்தல் சிறப்பாக இருந்தது. அதனால் எளிதில் முதுகலைப்பட்டம் பெற முடிந்தது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மேலும் முனைவர் பட்டம் பெற படிக்கவும் ஆசை இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...