Newsபுதிய காலநிலை செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாசா

புதிய காலநிலை செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாசா

-

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைகோளை நாசா இன்று(08) விண்ணில் செலுத்தியுள்ளது. கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பல்கன் ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட இச்செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது, பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்தபடி கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யவுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 3 அறிவியல் கருவிகளில், இரண்டு கருவிகள் மூலம் தினமும் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும். மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியை இந்த செயற்கைகோள் தெளிவாக காட்டும் என திட்ட விஞ்ஞானி ஜெர்மி வெர்டெல் தெரிவித்தார்.

சூறாவளி மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக தெரிவிக்கவும், வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் மாற்றங்களை விவரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாசிகள் எப்போது பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்டோரியாவிற்கு புதிய தேசிய பூங்காக்கள்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, விக்டோரியா மாநிலத்தில் புதிய தேசிய பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மூன்று புதிய தேசிய பூங்காக்களை...

லண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த இந்த பேரணியில்...

மூன்றாம் வாரமாகவும் தொடரும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மனித வேட்டை

குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரி Dezi Freeman-ஐ 20 நாள் தேடும் பணியில் முன்னணியில் இருந்து காவல்துறையினர் வியத்தகு புதிய பார்வையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். Porepunkah-இற்கு அருகிலுள்ள Mount...

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது. தற்போது, ​​வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...

எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம் – மெல்பேர்ணில் புதிய தொழில்நுட்பம்

மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு நோயாளியின்...