Sports4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது.

Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ஓட்டங்களும், தொடக்க வீரர் ஹாரி டிக்ஷன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஒலிவர் பெக்கே ஆட்டமிழக்காமல் 46 (43) ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 253 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பனி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி 3 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து முஷீர் கான் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பியர்டுமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆதர்ஷ் சிங் 47 (77) ஓட்டங்களில் வெளியேறினார். 122 ஓட்டங்களை எடுத்திருந்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது முருகன் அபிஷேக் அணியை மீட்க போராடினார். அவர் 46 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் பியர்டுமேன் மற்றும் ராப் மெக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், கலம் விட்லெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய அவுஸ்திரேலியா, நான்காவது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...