Sports4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது.

Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ஓட்டங்களும், தொடக்க வீரர் ஹாரி டிக்ஷன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஒலிவர் பெக்கே ஆட்டமிழக்காமல் 46 (43) ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 253 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பனி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி 3 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து முஷீர் கான் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பியர்டுமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆதர்ஷ் சிங் 47 (77) ஓட்டங்களில் வெளியேறினார். 122 ஓட்டங்களை எடுத்திருந்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது முருகன் அபிஷேக் அணியை மீட்க போராடினார். அவர் 46 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் பியர்டுமேன் மற்றும் ராப் மெக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், கலம் விட்லெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய அவுஸ்திரேலியா, நான்காவது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...