Newsஇனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

இனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

-

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகஸ்கர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...