Newsவிக்டோரியாவில் மோசமாகி வரும் காட்டுத்தீ

விக்டோரியாவில் மோசமாகி வரும் காட்டுத்தீ

-

விக்டோரியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயினால் 6 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 550 தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவசர சேவைகள் அமைச்சர் ஜாக்குலின் சைம்ஸ் தெரிவித்தார்.

இதுவரை, 228 தீ பாதிப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஆறு குடியிருப்பு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று சைம்ஸ் கூறினார்.

விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ காரணமாக அந்தப் பகுதி மக்கள் வீடுகளுக்குச் செல்வது இன்னமும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெப்பமான காலநிலை தொடரும் என வானிலை திணைக்களம் முன்னறிவித்துள்ளதால் எதிர்வரும் வாரத்தில் காட்டுத் தீ பரவும் என நம்பப்படுகின்றது.

பேயின்தீனில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாரட் அருகே சுமார் 16,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

விக்டோரியாவில் 2020-க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ நிலை இதுவாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கவனமாக இருக்குமாறு பிரதமர் ஜெசிந்தா ஆலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...