Newsஆழ்கடல் பயணத்தில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி!

ஆழ்கடல் பயணத்தில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி!

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகையையும் இணைக்கக் கூடிய சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்துக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

Latest news

இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் விக்டோரியா காவல்துறையின் நெருக்கடி

விக்டோரியா காவல் துறையின் தலைமை ஆணையர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை தற்காலிக ஆணையர் ரிக் நுஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன்...

நாடாளுமன்றக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விக்டோரியன் பிரதமரும் தற்போதைய பிரதமரும்

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறித்த விக்டோரியன் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ்...

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டி இனி தானாக நின்றுவிடும்!

வேக வரம்பை மீறி இயக்கப்படும் மின்சார மிதிவண்டிகளை தானாகவே பூட்டிக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிதிவண்டிகளை மணிக்கு 25 கிலோமீட்டருக்கும் அதிகமான...

செல்ஃபி எடுக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவர்

செல்ஃபி எடுக்க மறுத்ததற்காக தனது மனைவியை கொடூரமாக தாக்கிய மருத்துவ கணவர் குறித்து அமெரிக்காவிலிருந்து செய்திகள் வந்துள்ளன. மலையேற்றப் பயணத்தின் போது அவர் இந்தத் தாக்குதலைச் செய்துள்ளார். மருத்துவர்...

NSW-வில் அலைச்சறுக்கல் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகளுக்கு அலைச்சறுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தெற்கு டாஸ்மன் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள உடல் பருமன் கட்டுப்பாட்டு மருந்துகளின் விலை

ஆஸ்திரேலியாவில் உடல் பருமனைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் ஆஸ்திரேலியர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதே ஆகும். எனவே, பலர் அத்தகைய மருந்துகளை...