Newsகாஸாவில் பலி எண்ணிக்கை 30,000ஐ தாண்டிய நிலையில் மற்றொரு சோகம்

காஸாவில் பலி எண்ணிக்கை 30,000ஐ தாண்டிய நிலையில் மற்றொரு சோகம்

-

மேற்கு காசா பகுதியில் உணவு விநியோகம் செய்யும் டிரக்கை சுற்றி மக்கள் திரண்டதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பேர் பலியாகினர்.

மேலும் 760க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்,
மோதல் தொடங்கியதில் இருந்து காஸாவில் ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

உணவைப் பெற முயற்சிக்கும் பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயமற்றது என்று பிரான்ஸ் கூறியது, மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இந்தச் சம்பவம் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தலையீட்டாளர்களின் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று கவலை தெரிவித்தார்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி மோதல் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த 6 குழந்தைகளும் காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனை முற்றாக செயலிழந்து இந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 7 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாமல் போனது இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...