Breaking News170 பெண்கள், குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்

170 பெண்கள், குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்

-

புர்கினா பாசோவில் மூன்று கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொம்சில்கா, நோர்டின் மற்றும் சோரோவில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு சாட்சிகளை ஒரு அரசாங்க வழக்கறிஞர் கேட்டார்.

நகர்ப்புறங்களில் தாக்குதல்கள் உட்பட தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ராணுவ தளபதிகள் எச்சரித்துள்ளனர்.

2022 இல் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிய போதிலும், புர்கினா பாசோவின் மூன்றில் ஒரு பங்கு இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெப்ரவரி 25 ஆம் திகதி யதெங்கா மாகாணத்தில் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பின்னால் எந்தக் குழு உள்ளது என்பது இதுவரையில் வெளியாகவில்லை.

தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த அதிக ஆபத்து உள்ளதால், உஷாராக இருக்கும்படி அந்நாட்டு ராணுவ தளபதி வெள்ளிக்கிழமை தனது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகரங்களில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்கள் தொடரும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புர்கினா பாசோவின் நெருக்கடியானது உலகில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றாகும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக பரவலான பாதுகாப்பின்மையால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஐ.நா அறிக்கைகளின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று உறுதியளித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், வன்முறை இன்னும் நீடிக்கிறது.

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...