Newsஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

ஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

-

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்கான துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான உபகரணங்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் கடலோரப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில் இந்தக் கப்பல் வருகிறது.

அதேநேரம், 200 தொன் உணவு மற்றும் மாவுகளை ஏற்றிச் செல்லும் உதவிக் கப்பல் ஒன்று இன்று காசா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பாலஸ்தீன குடிமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களின் கீழ் வாழும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு துறைமுகம் ஒரு புதிய கடல் வழியை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம் மூலம் உதவிகளை வழங்குவதில் பாரிய தடைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்கான உதவிப் பொருட்களை அணுகுவதை எளிதாக்குமாறும், தங்கள் கான்வாய்கள் அந்தப் பகுதிக்குள் பாதுகாப்பாக பயணிக்க அனுமதிக்குமாறும் உதவி நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தற்காலிக துறைமுகத்தை நிர்மாணிப்பதில் 1,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈடுபடலாம் என்றும், அவர்களில் யாரும் தரை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பென்டகன் கூறியுள்ளது.

திட்டமிடப்பட்ட படகு சரியான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மிதக்கும் படகு நிலப்பகுதியுடன் தற்காலிக தரைப்பாதை மூலம் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஊடக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...