Melbourneமெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் தாக்கப்படுவதாக இரகசிய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ரயிலில் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள டிராம்களில் அல்லது அதற்கு அருகாமையில் தினமும் குறைந்தது ஒருவராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெல்போர்னில் உள்ள ரயில்கள் அல்லது நிலையங்களில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்றும், இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில பொது போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்து தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டுமென வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...