Breaking Newsகனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று

-

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

ஒட்டாவாவிலுள்ள இன்பினிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை கனடாவின் புத்தமத பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இறுதிச் சடங்கு கனடா நேரப்படி பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் திறந்திருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த தனுஷ்க விக்ரமசிங்கவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு, ஒட்டாவாவின் தலைநகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Barrhaven என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கனடாவிற்கு கல்வி கற்கச் சென்றிருந்ததாகவும் இக்குடும்பத்துடன் நட்பாக பழகி வந்ததாகவும் இவர்களது வீட்டில் சில காலம் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞன் இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பதை கனேடிய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...