News5ஆவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புட்டின்

5ஆவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புட்டின்

-

ரஷ்ய ஜனாதிபதியாக புட்டின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா்.

இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் ஜனாதிபதி தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது.

புட்டினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா். இதேபோல புட்டினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் அல்லது நாடு கடத்தப்பட்டனா். இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தோ்தல் உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து ரஷ்யாவுடன் சோ்த்துக் கொள்ளப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டது.

Latest news

மில்லியன் கணக்கான Followers-ஐ பெறும் Charlie Kirk-ன் சமூக ஊடக கணக்குகள்

Charlie Kirk-ன் கொலைக்குப் பிறகு அவரது சமூக ஊடகக் கணக்குகள் லட்சக்கணக்கான புதிய பின்தொடர்பவர்களைப் (Followers) பெற்றுள்ளன. CNN வழங்கிய தரவுகளின்படி, கொலைக்குப் பிறகு மூன்று நாட்களில்...

10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்டோரியாவிற்கு புதிய தேசிய பூங்காக்கள்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, விக்டோரியா மாநிலத்தில் புதிய தேசிய பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மூன்று புதிய தேசிய பூங்காக்களை...

லண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த இந்த பேரணியில்...

மூன்றாம் வாரமாகவும் தொடரும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மனித வேட்டை

குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரி Dezi Freeman-ஐ 20 நாள் தேடும் பணியில் முன்னணியில் இருந்து காவல்துறையினர் வியத்தகு புதிய பார்வையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். Porepunkah-இற்கு அருகிலுள்ள Mount...

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது. தற்போது, ​​வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...