Newsவெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

வெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

-

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.நாவின் வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் உலகின் மகிழ்ச்சியான நாடாகவுள்ளது.

அந்தவகையில் முறையே

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. சுவீடன்
  5. இஸ்ரேல்
  6. நெதர்லாந்து
  7. நோர்வே
  8. லக்ஸம்பேர்க்
  9. சுவிட்சர்லாந்து
  10. அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

2020 இல் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பையேற்று, மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜேர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை.

முறையே 23 மற்றும் 24 ஆவது இடத்திலிருந்து வருகின்றன. கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13ஆம் இடங்களிலுள்ளன.

மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...