Newsவிரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் ‘Sora AI’!

விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் ‘Sora AI’!

-

Open AI நிறுவனத்தின் காணொளி உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்துள்ளார்.

எழுத்து மூலமாக தருகிற உள்ளீட்டை விடியோவாக மாற்றக் கூடிய ‘Sora AI’ எனும் செயலியை Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியதிலிருந்து அதன் மீதான ஆர்வம் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உருவானது.

தற்போது, தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மட்டுமே Sora பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா பேசும்போது, சோராவை இன்னும் மெருகேற்றி காணொளியுடன் ஓடியோவையும் தரும் வகையில் உருவாக்கவுள்ளோம். எதார்த்த அனுபவம் இதன் மூலம் கிடைக்கக் கூடும் எனத் தெரிவித்தார்.

அதே வேளையில் Open AI, தனியுரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகவும் பொது பிரபலங்கள் குறித்த காணொளிகளை உருவாக்காது என்றும் இதன் காணொளிகளில் அது AI உருவாக்கியது என்பதைக் காட்ட Watermark பதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...