SportsIPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

-

ஐ.பி.எல். 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற சி.எஸ்.கே. அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது

  1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

  1. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு களத்தடுப்பாளர் பவுண்டரி கோட்டை ஒட்டிய வகையில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி கோட்டை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

Latest news

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...

மெல்பேர்ண் மருத்துவமனையில் மின் தடை – முடங்கிய செயல்பாடுகள்

மெல்பேர்ண் Alfred மருத்துவமனையில் புதன்கிழமை பிற்பகல் அறுவை சிகிச்சையின் போது மூன்று அறுவை சிகிச்சை அறைகளில் தற்காலிக மின்சாரம் தடைப்பட்டது. ஜெனரேட்டர்கள் இயங்க வேண்டியிருந்தாலும் அவை செயலிழந்துவிட்டதால்,...

Coonawarra-இற்கு மீண்டும் திரும்பும் Brandy உற்பத்தி

தெற்கு ஆஸ்திரேலியாவின் Coonawarra Limestone Coast-இல் பிராந்தி உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதியில் முன்னணி வயின் நிறுவனமான Majella Wines, பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தப்...