Sportsபோராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் - IPL 2024

போராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் – IPL 2024

-

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின.

இதில், நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரசல் 64 ஓட்டங்களையும், சால்ட் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதையடுத்து, 209 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அகர்வால் 32 ஓட்டங்களையும், அபிஷேக் 32 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த திரிபாதி 20 ஓட்டங்களுடனும், மார்க்ரம் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். அப்துல் சமத் 15 ஓட்டங்களை எடுத்தார்.

63 ஓட்டங்களை குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் அணி ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....