Newsடெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் - IPL 2024

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

-

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் Riyan Parag தனியாளாக அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், அவர் 23 (12) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, நான்ரே பர்கரின் அசுரவேகத்தில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து வந்த ரிக்கி புய் அதே ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில் David Warner ருத்ர தாண்டவம் ஆடினார்.

மறுமுனையில் ரிஷாப் பண்ட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் 49 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து அணித்தலைவர் பண்ட் 28 ஓட்டங்களில் சஹால் ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி சரிவை சந்தித்தது. அப்போது அதிரடியில் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். மிரட்டலாகவும், துல்லியமாகவும் அவர் பந்துவீசியதால் டெல்லி அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.

இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. சஹால், பர்கர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

ராணுவத் தலையீடு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடற்படையின் வளைகுடா பகுதியில் சீன போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நடத்திய ராணுவ பயிற்சியே...

ஆபாசமான இணையதளங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற புதிய வழிமுறை

இணையத்தில் குழந்தைகள் ஆபாசமான படங்களை பார்ப்பதை குறைக்கும் நோக்கில் சில புதிய நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய திட்டங்களின்படி, இணையதளத்தை அணுகும்போது வயது...

சர்வதேச மாணவர்களுக்கான புதிய விதிகளுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகத் துறை எச்சரித்துள்ளது. நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச கல்வி கவுன்சில் கூடியபோது,...

இன்றைய மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு கணிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2 அல்லது 3 சதவீத இலக்கை எட்டும் என்று கருவூலம் கணித்துள்ளது. இன்றைய மத்திய பட்ஜெட் எதிர்பார்த்ததை விட ஓராண்டு முன்னதாகவே...

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு காய்ச்சல் சீசன்...

உலகின் 10 பணக்கார பெண்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் 10 பணக்கார பெண்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் உலகின் பணக்கார பெண்கள் மற்றும் அவர்களின்...