Sportsதன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ - IPL 2024

தன் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இதில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி கொக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி கொக் சிறப்பாக நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ஓட்டங்களும், குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் – பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களுடனும், ஜித்தேஷ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

Latest news

Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது. உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...