Newsகோல்ட் கோஸ்டில் போதையில் இறந்த பெண் குறித்து வெளியான தகவல்

கோல்ட் கோஸ்டில் போதையில் இறந்த பெண் குறித்து வெளியான தகவல்

-

அண்மையில் கோல்ட் கோஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்த பெண்ணுக்கு 40வது பிறந்தநாளை கொண்டாடும் போது வலிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆறு நெருங்கிய நண்பர்களுடன் சர்ஃபர்ஸ் பாரடைஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய 40 வயதுடைய பெண்ணின் அடையாளத்தை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அங்கு சில பெண்கள் பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இரவு 11 மணியளவில் பல மருந்துகளை அதிகமாக உட்கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.

பிறந்தநாளைக் கொண்டாடிய பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு 43 வயது பெண் ஆபத்தான நிலையில் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெண்களின் அதிகாரமளித்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல உரையாடல்களில் ஈடுபட்டு வந்த பெண் எனவும், அதற்காக அர்ப்பணிப்புடன் பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...