Newsசிவப்பு கம்பளங்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ள பாகிஸ்தான்

சிவப்பு கம்பளங்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ள பாகிஸ்தான்

-

பண நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும்.

பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின் கீழ் இத்தடை அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையால், பணம் சேமிக்கப்படுவதுடன், பொதுமக்களின் நிதி பொறுப்புடன் செலவிடப்படுவதற்கான நோக்கம் செயல்படுத்தப்படும்.

பாகிஸ்தானின் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் அமைச்சவை உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விருப்பத்துடன் விட்டு கொடுப்பது என கடந்த வாரம், முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், தன்னுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விட்டு கொடுப்பதாக தீர்மானித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...