Newsஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

-

பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான புதிய சாசனத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதே வாக்குறுதிகளையே புதிய பிரகடனமும் மீண்டும் செய்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய சாசனத்தின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் முறைப்பாடுகள் தொடர்பான ஒம்புட்ஸ்மேன் பதவியை ஸ்தாபித்தல் மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான பணிக்குழுவை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சாசனத்தின் கீழ், பல்கலைக்கழக நிர்வாகம் 9 அம்சங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது, இதில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புள்ளிவிவர தகவல்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவிப்பது உட்பட பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், புதிய சாசனத்திற்கு முழு பல்கலைக்கழக அமைப்பும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...