Newsகாசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

காசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

-

தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரையில் நிலவி வரும் மோதல்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படையினர் வெளியேறியமைக்கான காரணமோ, அதில் ஈடுபட்ட மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையோ வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட தெற்கு காசா நகரின் கான் யூனிஸ் பகுதியில் வசிப்பவர்கள், இஸ்ரேலியப் படைகள் நகர மையத்திலிருந்து வெளியேறி கிழக்கு மாவட்டங்களுக்கு பின்வாங்குவதைக் கண்டதாகக் கூறினர்.

ஹமாஸ் போராளிகளை ஒழிக்க விரும்புவதாக இஸ்ரேலிய தலைவர்கள் கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தெற்கு காஸா நகரமான ரஃபா மீதான படையெடுப்பை தாமதப்படுத்துவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

எகிப்து எல்லைக்கு அருகில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள ரஃபா நகரை தாக்கும் திட்டம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எகிப்து தயாராகி வரும் நிலையில் இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலில் பாரிய மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் இதுவும் நடக்கிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...