Breaking Newsசிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

சிட்னி ஷாப்பிங் மாலில் கத்தி குத்து சம்பவத்தில் 4 பேர் பலி

-

சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வெஸ்ட்ஃபீல்ட் மாலில் இருந்து மக்கள் ஓடிவருவதைக் காண முடிந்தது, மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பதிவாகியதையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்க்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை, தாக்குதல் நடத்தியவர் என நம்பப்படும் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியது.

ஒரு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...