Sportsபஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை - IPL 2024

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிவந்த ரோகித் சர்மா, 25 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ், அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களான ஹர்திக் 10 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 14 ஓட்டங்களிலும், சைபர்ட் ஒரு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளும், சாம் கரண் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் சாம் கரண் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் (0) ஓட்டம் ஏதும் எடுக்காதநிலையில் வெளியேறினார். அவரைத்தொடர்து ரூசோவ் 1 ஓட்டங்களிலும், சாம் கரண் 6 ஓட்டங்களிலும், லிவிங்ஸ்டோன் 1 ஓட்டத்துடனும் ஹர்பிரித் சிங் பாட்டியா 13 ஓட்டங்களிலும், ஜிதேஷ் சர்மா 9 ஓட்டங்களிலும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங் சிங் 41 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அசுடோஷ் சர்மாவுடன், ஹர்பிரித் பிரார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த அசுடோஷ் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்பிரித் பிரார் 21 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி ஓவரில் 8 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் ஹர்ஷல் பட்டேல் 1 ஓட்டத்துடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் மேத்வால், கோபால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.

Latest news

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

புற்றுநோய் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தகவல்

புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய ரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே...

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட சுகாதார தரவு ஆபத்தில் உள்ளதா?

இ-ப்ரிஸ்கிரிப்ஷன்களை விநியோகிக்கும் MediSecure, மக்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இந்த சேவையை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட சுகாதார தரவுகளுக்கு ஆபத்து...