Newsகடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

கடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

-

வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.

கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள இடாவோ வங்கிக் கிளையின் கவுன்டரில் இருந்த பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலையில் கையை வைத்து அவரது கையிலிருந்து பேனாவைப் பறிக்க முயன்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக ஊடகங்களில் அம்பலமாகியுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் 3000 டொலர்களை கடனாகப் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் தொகையை இறந்தவர் பெயரில் தேவை என வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரவாததாரர் எந்த பதிலும் அளிக்காததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் என கூறி ஆம்புலன்சை வரவழைத்து, விசாரணையில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது.

குறித்த நபர் சம்பவத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக அம்புலன்ஸ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...