Newsகடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

கடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

-

வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.

கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள இடாவோ வங்கிக் கிளையின் கவுன்டரில் இருந்த பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலையில் கையை வைத்து அவரது கையிலிருந்து பேனாவைப் பறிக்க முயன்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக ஊடகங்களில் அம்பலமாகியுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் 3000 டொலர்களை கடனாகப் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் தொகையை இறந்தவர் பெயரில் தேவை என வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரவாததாரர் எந்த பதிலும் அளிக்காததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் என கூறி ஆம்புலன்சை வரவழைத்து, விசாரணையில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது.

குறித்த நபர் சம்பவத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக அம்புலன்ஸ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...