Newsகடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

கடன் வாங்குவதற்காக சடலத்துடன் வங்கிக்குச் சென்ற பெண்

-

வங்கியில் கடன் வாங்குவதற்காக இறந்தவரை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரேசிலில் இருந்து வெளியாகியுள்ளது.

கடனை மீட்பதற்காக மாமா எனக் கூறி உயிரிழந்த நபரை சக்கர நாற்காலியில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள இடாவோ வங்கிக் கிளையின் கவுன்டரில் இருந்த பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலையில் கையை வைத்து அவரது கையிலிருந்து பேனாவைப் பறிக்க முயன்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக ஊடகங்களில் அம்பலமாகியுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் 3000 டொலர்களை கடனாகப் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடன் தொகையை இறந்தவர் பெயரில் தேவை என வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரவாததாரர் எந்த பதிலும் அளிக்காததால், வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம் என கூறி ஆம்புலன்சை வரவழைத்து, விசாரணையில், அந்த நபர் இறந்து விட்டது தெரியவந்தது.

குறித்த நபர் சம்பவத்திற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக அம்புலன்ஸ் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரேசில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...