Sports35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி - IPL...

35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 41-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஊதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு பிளசிஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறக்கிய ரஜத் படிதார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். விராட் கோலி மற்றும் படிதார் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 37 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 1 ஓட்டத்துடன் பிடிகொடுத்து ஐதராபாத் அணியின் ரசிகர்கள்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் 7 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசென் 7 ஓட்டங்களும், நிதிஷ் ரெட்டி 13 ஓட்டங்களும், அப்துல் சமத் 10 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர்.

அடுத்ததாக ஷபாஸ் அகமதுவுடன், பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த பேட் கம்மின்ஸ் 31 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதிவரை போராடிய ஷபாஸ் அகமது 40 (37) ஓட்டங்களும், உனத் கட் 8 (10) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய கேமரூன் கிரீன், சுவப்நில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், யாஸ் தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....