Newsஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு கப்பல்கள்

-

அவுஸ்திரேலியாவிற்கு வரும் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த சட்டவிரோத மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை வடக்கு ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் இயங்குவதாகத் தெரிகிறது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சட்டவிரோத மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், மனித கடத்தல்காரர்கள் பற்றிய தகவலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 216 வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட படகுகள் தொடர்பான விசாரணையில் மனித கடத்தல் இடம்பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு கடற்கரையில் உள்ள கடல் பூங்காக்களில் மனித கடத்தல் அதிகமாக நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய மீனவர்கள் சில நிலங்களில் முகாமிட்டு மீன்பிடிக்கிறோம் என்ற போர்வையில் சதுப்புநிலங்களை அழித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தவிர்க்குமாறும், பிடிபட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...