Newsசுகாதார அமைச்சரின் வருகையின் போது நோயாளிகளாகச் செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள்

சுகாதார அமைச்சரின் வருகையின் போது நோயாளிகளாகச் செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள்

-

விக்டோரியாவின் சுகாதார அமைச்சர் மேரி-ஆன் தாமஸின் வருகையின் போது மருத்துவமனை ஊழியர்கள் குழு ஒன்று நோயாளிகள் போல் நடித்ததாக சுகாதாரத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோலக் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு சென்ற போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மருத்துவ மனை மிகவும் பரபரப்பாக உள்ளதை நம்ப வைக்க இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தந்திரத்தில் ஈடுபட்ட 10 ஊழியர்களில் ஒருவர் ஆம்புலன்சில் நோயாளியாக வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வைத்திய நிலையம் தனது சொந்த ஊழியர்களை பயன்படுத்தி மிகவும் பரபரப்பான அவசர சிகிச்சை நிலையமாக காட்டவே இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் வருகைக்குப் பின்னர் நோயாளிகள் பதிவு தரவு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் ரத்து செய்யப்பட்டதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இது உண்மையான நோயாளிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.

10 ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் சம்பவத்தின் தீவிரம் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...