Newsஉக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் -...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

-

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னாள் இராணுவத்தினரை அனுப்பி கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடியான வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஓய்வுபெற்ற போர்வீரர்களை ரஷ்ய – உக்ரைன் போர் முனைக்கு அனுப்பும் மோசடி செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

பீட்டர்ஸ்பேர்க் போன்ற புகழ்பெற்ற இடங்களில் காணிகளை வழங்குவதாகவும், ரஷ்யாவின் குடியுரிமை வழங்குவதாகவும், போரில் ஈடுபடும் மக்களுக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவர்களுக்கு பணமோ, சம்பளமோ வழங்கப்படவில்லை என்றும், உயிரிழப்பு ஏற்பட்டாலோ, பலத்த காயம் ஏற்பட்டாலோ இழப்பீடும் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த மோசடிகளில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பலர் சிக்கி போர் முனையில் இறங்கியுள்ளதாகவும் அதில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் இராணுவத்தினர் தொடர்ந்து போருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல, கூலிப்படையினர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்களைத் தேடுவதற்கான விசாரணைகள் வெளிவிவகார அமைச்சினாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

நியூசிலாந்திலிருந்து இரண்டு விசா வாய்ப்புகள்

நியூசிலாந்து இரண்டு புதிய திறமையான புலம்பெயர்ந்தோர் வகை (SMC) குடியிருப்பு பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயல்படும், மேலும் திறமையான தொழிலாளர்கள்...

டிரம்பின் அறிக்கையை எதிர்க்கும் ஆஸ்திரேலிய நிபுணர்கள்

கர்ப்ப காலத்தில் Acetaminophen பயன்படுத்துவது Autism அபாயத்தை அதிகரிக்கும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றுக்கு ஆஸ்திரேலிய நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாராசிட்டமால் எனப்படும் Acetaminophen-ஐ...

விக்டோரியா பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்ப திகதிகளில் மாற்றம்

விக்டோரியாவில் 2026 பல்கலைக்கழக விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நெருங்கி வருவதாக விக்டோரியா மூன்றாம் நிலை சேர்க்கை மையம் (VTAC) அறிவித்துள்ளது. மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பங்களை...

பொழுதுபோக்குக்காக பணத்தை அதிகம் செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் பொழுதுபோக்குக்கான தங்கள் செலவினங்களை மீண்டும் அதிகரித்துள்ளதாக UBS கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும்...

பொழுதுபோக்குக்காக பணத்தை அதிகம் செலவிடும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் பொழுதுபோக்குக்கான தங்கள் செலவினங்களை மீண்டும் அதிகரித்துள்ளதாக UBS கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள் குறைந்த பணவீக்கம், அதிகரித்து வரும்...

திருடப்பட்ட கத்தியுடன் வங்கியைக் கொள்ளையடிக்கச் சென்ற பெண்

சிட்னியில் திருடப்பட்ட கத்தியைக் காட்டி வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Kingsgrove-இல் உள்ள காமன்வெல்த் வங்கிக்குள் காலை 10 மணியளவில்...