Newsநிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

-

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சியில் நாசா தற்போது இறங்கியுள்ளது. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலிலிருந்து சற்று மாறுபடுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைப்பது தான் நாசாவின் திட்டம். தானியங்கி முறையில் செயற்படும் வகையிலும், சுமைகளைக் கடத்திச் செல்லும் வகையிலும் இதன் இயக்கம் இருக்கவேண்டும் என நாசா விரும்புகிறது.

உலக நாடுகள் விண்வெளியில தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்ற வகையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் உள்ளடங்குகின்றன.

அண்மைய காலமாக உலக நாடுகளின் பார்வை நிலவின் மீது அதிகம் விழுந்துள்ளது. இச்சூழலில் தான் நாசா, ‘லூனார் ரயில்வே’ குறித்து பேசியுள்ளது. நிலவில் நீர் உள்ளதா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தான் இது கவனத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் நாசாவின் NASA Innovative Tech Concepts சார்ந்து ஆறு திட்டங்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த லூனார் ரயில்வே. ஃப்ளோட் (Flexible Levitation on a Track) என இந்த திட்டம் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மேம்பட்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்க நாசா முயல்கிறது. நிலவில் ‘மூன் பேஸ்’ கட்டுமானம் மற்றும் அதன் இயக்கம் சார்ந்த பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இது அமையும் என நாசா நம்புகிறது.

Latest news

அவுஸ்திரேலியாவில் எகிறியுள்ள உள்நாட்டு விமானக் கட்டணம்

பிராந்திய விமான நிறுவனங்களான Rex மற்றும் Bonza ஆகியவை ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. விமானக் கட்டணம்...

Instagram-இல் அறிமுகப்படுத்தப்படும் அதிரடி பாதுகாப்பு முறை

பதின்ம வயதினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான Instagram புதிய பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, Instagram பயன்படுத்தும் பதின்ம வயதினரின் பெற்றோர்கள்...

NSW-வில் மாறி வரும் வாகன அபராதம் விதிக்கும் முறை

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு டிக்கெட் இல்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான அபராதத்...

Online Marketing நிறுவனத்திடமிருந்து ஊழியர்களுக்கான புதிய சட்டம்

Internet Marketing சேவையின் ஜாம்பவானான Amazon, அடுத்த ஆண்டு 2025 முதல், நிறுவன ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. தலைமை...

மெல்பேர்ணில் நடைபெறும் மற்றுமொரு பாரிய போராட்டம்

கட்டுமானம், வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் சங்கத்தின் (CFMEU) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று மெல்பேர்ணில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களால் நேற்று...

விக்டோரியாவின் வெளிநாட்டு மாணவர்களின் குறைப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு அடித்துள்ள அதிஷ்டம்

விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை சேர்க்க மத்திய அரசு விதித்துள்ள வரம்புக்கு உட்பட்டு இந்தியாவில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்க...